"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சுகத்தை தரும் அகத்தி - Agathi tree.

சுகத்தை தரும் அகத்தி - Agathi tree.

நலம் நல்கும் அகத்தி.

அகத்தி கீரையைப்பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். பெரும்பாலான பேர் இதனை உணவாகவும் பயன்படுத்தியிருக்கலாம். இது உணவில் கீரையாகமட்டுமல்ல, நோய் தீர்க்கும் மூலிகையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது பெரும்பாலும் மூலிகை மருத்துவத்தில் குடிநீராகவும், தைல வகை மருந்துகளில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    Giving Health - Agathi.

    சங்க இலக்கியங்களில் ''புகழாவாகை'' என அழைக்கப்படும் அகத்தி பல மருத்துவப் பண்புகளை தன்னகக்தே கொண்டுள்ளது.

    அகத்தியில் இலைபூகாய்பட்டைவேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது.

    அகத்திக்கீரை உடலில் இரத்தஓட்டத்தை சமப்படுத்தி உடலின் உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும் பணியினை செய்கிறது.  குடலில் உண்டாகும் நச்சு நீர்களை முறித்து வெளியேற்றும் திறன்படைத்தது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடல்சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும்.

    அகத்தியிலையை சுத்தம் செய்து அரைத்து அடிபட்டு இரத்தம் வெளிப்படும் காயங்களுக்கு வைத்துக் கட்ட சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும். இலைச்சாற்றை சேற்றுப்புண்களில் தடவிவர புண்கள் விரைவில் ஆறிவிடும்.

    அகத்திக்கீரையுடன் தேங்காய்ப்பால் சேர்த்தரைத்து உடலில் தேய்த்து சிறிதுநேரம் ஊறவைத்து குளித்தால் கண்களுக்கு கிழே காணப்படும் கருவளையம் மறையும்.

    அகத்தியிலைச்சாறு அல்லது அகத்திப்பூ சாற்றில் தேன் கலந்து குடித்துவர தொடர்தும்மல் நிற்கும்.

    அகத்திக்கீரைச்சாற்றில் உப்பு சேர்த்து குடித்துவர பித்தம் நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் 15 மில்லி முதல் 30 மில்லிவரை அகத்திக்கீரைச்சாறு அருந்திவர வயிற்றில் உள்ள நுண்கிருமிகள் வெளியேறும்.

    அகத்திக்கீரையை சமையலில் சேர்த்துவர ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். சிறுநீர்மலம் சிக்கலின்றி வெளியேறும்.  இதை தினமும் சிறிதளவு சாப்பிட்டுவர வயிற்றுப்புண் என்னும் அல்சர் நோயை குணப்படுத்தும். குடற்புழுக்களை நீக்கும். மனக்கோளாறுகள் சரியாகும்.

    Akatti Tree

    உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தியிலையை  தேங்காய் எண்ணெய்யுடன் வதக்கி அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும். அகத்தியிலையுடன் சமனளவு தேங்காய் சேர்த்து அரைத்து சாறெடுத்து அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து தேமல், சொறி, சிரங்கு, கரும்படை உள்ள இடத்தில் பற்று போட்டால் முழுமையாகக் குணமடையும்.

    அகத்திப்பட்டைச்சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

    அகத்தியிலை, மருதாணியிலை, மஞ்சள் மூன்றையும் சமஅளவு எடுத்து அரைத்து தடவினால் கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.

    அகத்திக்கீரை சாப்பிட்டுவந்தால் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் தீரும். இரத்தபித்தம், இரத்த கொதிப்பு ஆகியவை நீங்கும்.

    அகத்தி மரப்பட்டை, அகத்தி வேர்ப்பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி அளவு 2 வேளை குடித்துவர காய்ச்சல், கை, கால், மார்பு எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக்காய்ச்சல் குணமாகும்.

    செவ்வகத்திப்பூ சாற்றை மூக்கில் பிழிந்து வர மூக்கிலிருந்து திடீர் திடீரென வடியும் இரத்தம் நிற்கும்.

    அகத்திக்கீரை தைலம்.

    தேவையானபொருட்கள் :-

    அகத்தியிலைச்சாறு    - 1லிட்டர்.
    நல்லெண்ணை        - 1 லிட்டர்.
    கஸ்தூரிமஞ்சள்       - 20 கிராம்.
    சாம்பிராணி           - 20 கிராம்.
    கிச்சிலிக்கிழங்கு       - 20 கிராம்.
    விளாமிச்சம்வேர்      - 20 கிராம்.

    மருந்துகளை பொடிசெய்யும் முறை :-

    கஸ்தூரிமஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்சம்வேர் இவைகளை ஒன்றாக சேர்த்து இடிக்காமல் ஒவ்வொன்றாக தனித்தனியாக இடித்து சலித்து 20 கிராம் அளந்து எடுத்துக்கொள்ளவும். பின் நான்கு பொடிகளையும் ஒன்றாக நன்கு சேரும்படி கலந்துகொள்ளவும்.

    மூலிகை பொருட்களை மருத்துவ முறைப்படி ''சுத்தி'' செய்துகொள்ளவது மிக முக்கியம். அதன்படி செய்தால்தான் மூலிகையின் துர்குணங்கள் நீங்கி மருந்தின் வீரியம் அதிகரிக்கும். அதேபோல் மருந்துப் பொருட்களை தனித்தனியாக இடிக்காமல் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரே நேரத்தில் இடிப்பதால் மருந்தின் குணம் கெடும். எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.

    செய்முறை.

    அகத்தி இலை சாற்றையும், நல்லெண்ணெயும் கலந்து பதமுறக்காய்ச்சி முன் சொல்லப்பட்டுள்ள நான்கு சூரணங்களையும் போட்டுக் கலக்கி சூரணங்கள் கருகாமல் தைல பக்குவத்தில் இறக்கிவிடவும்.

    தீரும் நோய்கள்.

    வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெரும்.

    உணவு வகைகள்.

    நோய்தீர்க்கும் மூலிகையாக பயன்படுத்தப்படும் இது கீரையாகவும் சமைத்து உண்ணப்படுகிறது. இனி அகத்திக்கீரையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை காண்போம்.

    அகத்திக்கீரை குழம்பு.

    தேவையானவை :-

    அகத்திக்கீரை இலை - 2 கப்
    சின்ன வெங்காயம் - 1 கப்
    மிளகாய்த்தூள் - இரண்டரை டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    புளி - நெல்லிக்காய் அளவு
    மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
    பூண்டு - 6 பல்லரிசி
    தக்காளி - 4
    உப்பு - தேவையான அளவு.

    வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்கள் :-

    உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
    துவரம்பருப்பு - அரை டீஸ்பூன்
    பச்சரிசி - அரை டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்.

    தாளிக்கத் தேவையான பொருட்கள் :-

    உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - கால் கப்.

    செய்முறை.

    பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். அகத்திக்கீரையை நன்கு கழுவி குக்கரில் அரை கப் தண்ணீர்தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கி 2 நிமிடம் கழித்து திறந்து வைக்கவும். பூண்டுப்பல்லை நசுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம்தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

    எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து பொன்னிறமானதும் வெங்காயம்நசுக்கிய பூண்டு சேர்த்து நிறம்மாறும்வரை வதக்கி தக்காளி சேர்த்துதக்காளி நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்துமிளகாய்த்தூள்மல்லித்தூள்மஞ்சள்தூள்உப்பு சேர்த்து பச்சை வாசனைபோக கொதிக்க விடுங்கள். நன்கு கொதிக்கும்போது கீரையை அதனுடன் சேர்த்து  பச்சைவாசனை போனதும் பொடித்து வைத்திருக்கும் மசாலாப் பொடியைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

    agathi keerai kulambu

    கமகமக்கும் அகத்திக்கீரை குழம்பு ரெடி.

    அகத்திக்கீரை சாம்பார்.

    தேவையானவை :-

    துவரம்பருப்பு - 100 கிராம்
    அகத்திக்கீரை - 1 கப்
    சின்னவெங்காயம் - 20
    பூண்டு - 8 பல்
    தக்காளி - 1
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    கடுகுவெந்தயம் - சிறிதளவு
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 2
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை.

    துவரம்பருப்பை அலசி அத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு வேகவைத்து மசித்து கொள்ளவும். அகத்தி கீரையையும் சுத்தம் செய்து  வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் தக்காளிவெங்காயம் போட்டு வதக்கவும். பின் அகத்திக்கீரையை போட்டு நிமிடங்கள் வதக்கவும். பின் மசித்த துவரம்பருப்பு பச்சைமிளகாய்பூண்டுமஞ்சள்தூள்சீரகத்தூள்புளி கரைத்த நீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வந்ததும் அவற்றுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கிளறி கொதிக்கவிடவும்.

    agathi keerai sambar

    கமகம சுவையோடு சத்து நிறைந்த அகத்திக்கீரை சாம்பார் ரெடி.

    அகத்திக்கீரை சொதி.

    தேவையானவை :-

    அகத்திக்கீரை - 1 கட்டு
    மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்
    பெரியவெங்காயம் - 1
    தேங்காய்ப்பால் - 1 கப்
    பச்சைமிளகாய் - 4
    தக்காளி - 2
    உப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - தேவையன அளவு.

    செய்முறை.

    கீரையை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். தக்காளியை நான்கைந்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சைமிளகாயை இரண்டிரண்டாகக் கீறிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடன் உப்புமஞ்சள்தூள் சேர்க்கவும்.

    வெங்காயம்தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை சேர்த்து சிறிதுநேரம் கொதிக்கவிடவும். கீரை வெந்ததும் 5 நிமிடத்திற்குப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றுங்கள். பால் கொதித்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கிவிடவும்.

    agathi keerai sodhi

    சுவையான அகத்திக்கீரை சொதி தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

    அகத்திக்கீரை சூப்.

    தேவையானவை :- 

    அகத்திக்கீரை - 1 பிடி
    அரிசி கழுவிய நீர் - அரை லிட்டர்
    நல்லமிளகுத்தூள் - சிறிதளவு
    தேங்காய்ப்பால் - 100 மில்லி
    மஞ்சள்தூள் - டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    சிறியவெங்காயம் - 10
    பூண்டு - 4 பல்
    தக்காளி - 1
    கிராம்பு - 1
    நெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை.

    சிறிய வெங்காயத்தையும்பூண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

    குக்கரில் நெய்விட்டு அகத்தி கீரையைப்போட்டு லேசாக வதக்கி அதன்பின் அதனோடு வெங்காயமும்பூண்டும் சேர்த்து  2 நிமிடம் வதக்கி அதன்பின் அதனோடு மஞ்சள்தூள்சீரகம்பட்டைகிராம்பு சேர்த்து வதக்கி அரிசிகழுவிய தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். 2 விசில் வந்தவுடன் இறக்கி தேங்காய்ப்பால்,  நல்லமிளகு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

    agathi keerai soup

    அகத்திக்கீரை சூப் ரெடி. வாரம் ஒருநாள் இதை சாப்பிட்டுவர வயிற்றுப்புண்,  வாய் புண்கள் தீரும்.

    அகத்திக்கீரை பொரியல்.

    தேவையானவை :-

    அகத்திக்கீரை - 4 கப்
    தேங்காய் - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 3
    பூண்டு - 6 பற்கள்
    கடுகு - சிறிதளவு
    வெங்காயம் - 1
    உளுந்தம்பருப்பு - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - மேஜைக்கரண்டி.

    செய்முறை.

    காய்ந்த மிளகாய் (வத்தல்) மற்றும்  பூண்டு இரண்டையும் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகுஉளுத்தம்பருப்பை தாளிக்கவும். பின்பு  நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும். அதன்பின் அரைத்த பூண்டுமிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்கிய பின்பு சுத்தம் செய்த அகத்திக்கீரையை போட்டு நன்கு கிளறவும். கீரை வெந்தவுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

    agathi keerai poriyal

    சுவைமிகுந்த அகத்திக்கீரை பொரியல் ரெடி.

    அகத்தி பூ பொரியல்.

    தேவையானவை :-

    செவ்வகத்திப்பூ - கால் கிலோ
    சின்னவெங்காயம் - 15
    வரமிளகாய் - 2
    கடுகு - கால் ஸ்பூன்
    கடலைப்பருப்பு - கால் ஸ்பூன்
    உளுந்தம்பருப்பு - கால் ஸ்பூன்
    தேங்காய்ப்பூ - 3 ஸ்பூன்
    கருவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய் - 3 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை.

    செவ்வகத்திபூவில் காம்பை நீக்கி சிறிதாக அரிந்து நீரில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பின்பு சின்ன வெங்காயம் வதக்கியபின் அதனுடன் வரமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.

    agathi poo poriyal

    பின்பு அரிந்த செவ்வகத்திப்பூவை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அளவான சூட்டில் கிளறவும். பின்பு தேங்காய்ப்பூவை சேர்த்து கிளறி இறக்க சுவையான அகத்திப்பூ பொரியல் ரெடி.

    முக்கிய குறிப்புகள்.

    அகத்திக்கீரைக்கு மருந்துகளின் வீரியத்தை குறைக்கும் சக்தி உண்டு. எனவே வேறு ஏதாவது நோய்களுக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் மருந்து சாப்பிடும் வரை அகத்திக்கீரை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    அதிக அளவு மது சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் இக்கீரையை சாப்பிடுவதை தவிர்க்கவும். 

    இக்கீரையை அடிக்கடி உண்பதால் கிரந்தி, சொறி, வாய்வு முதலிய உடற்கோளாறுகள் அதிகரிக்கின்றன. எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவும். வாரத்திற்கு ஒருநாள் அல்லது 10 தினங்களுக்கு ஒருமுறை உணவாக பயன்படுத்திவர பல நன்மைகளை அடையலாம்.

    பொதுவாக கீரை உணவை அது எந்த கீரையாக இருந்தாலும் சரி இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கீரை ஜீரணிப்பதற்கு கொஞ்சம் கடினம் என்பதாலும், பகலில் ஜீரண மண்டலம் பிரமாதமாக வேலை செய்வதுபோல இரவில் வேலை செய்வதில்லை ஆதலால் ஜீரணிக்க கடினமான பொருள்களை இரவில் புசிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவ பொன்மொழிகள்.

    ''முருங்கைக்கீரை வெந்து கெட்டதுஅகத்திக்கீரை வேகாமல் கெட்டது.''

    பொருள் :-

    முருங்கைக்கீரை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் இழந்து கெட்டுப்போகும். அகத்திக்கீரையை அதிகம் வேகவைக்காமல் இருந்தால் அதன் கசப்புசுவை மாறாமல் உண்பதற்கு பக்குவநிலை அடையாமல் கெட்டுப்போகும்.

    ''அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே''

    பொருள் :-

    வேர்பட்டைஇலைபூ முதலியன மருத்துவத்திற்கும்உணவிற்கும் பயன்படுகிறது. ஆனால் காய் மட்டும் எதற்கும் பயன்படுவதில்லை. எனவே இது ஆயிரக்கணக்காக காய்த்தாலும் புறம் தள்ளுவதற்கு மட்டுமே (புறத்தி = புறம் தள்ளுதல்விலக்குதல்) பயன்படுகிறது என்பதாம்.

    💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்